வெள்ளி, 28 ஜனவரி, 2011

புதிய வள்ளுவம் தொகையிடல் தமிழ் எழுத்து ௧

அறிவு மெருக வேண்டின் உடலைவருத்து
அந்தஉடல் வருத்தமே அறிவாய்மிளிரும்
ஆண்டுகள் பல கழிந்தாலும் ஆண்டோர்அறிவு
ஆண்டாண்டாய் நிலைத்து இருக்கும்
தூற்றுவோர் தூற்ற போற்றுவோர் போற்ற
தூயென காரியுமிழ்ந்த போதிலும்
நாட்டிற்கு உனக்கு உலகிற்கு நன்மை
நாடசெய்வதை ஒருபோதும் கைவிடவேண்டா
என்ன இழிவு நேர்ந்தாலும் அறிவுசார்தன்னிலை
என்ன பாடுபட்டாவது பெறு

சனி, 22 ஜனவரி, 2011

செயற்கை வஸ் இயற்கை

செயற்கை இயற்கைக்கு ஊறு விளைவிக்காமல்
செயல்படும் வரை நல்லது
செய்யும் செயல்கள் செயற்கையாய் இருப்ப
செவ்வினை இரத்தம் கக்குவர்
அசிங்கமில்லா இயற்கை செயல்கள் புவியை
அசிங்கபடுத்தாது அறிவையோ மனிதா
பூமி தாய் வாண தேவன்
இயற்கை அன்றி வேறேது
இயற்கையை வெல்ல நினைப்பவன் அறிவிலி
செயற்கைதான் தருமோ நற்பொருள்

வெள்ளி, 14 ஜனவரி, 2011

விழா மகிழ்ச்சி

கற்றல் கேட்டல் சம்பாத்தியம் செலவிடல்
கருத்தாய் வீடுதிரும்ப விழா
காணிக்கை இறைவனை நினைத்து நன்றிகூறி
காலமெல்லாம் வளர்த்தாயே என்பதுவிழா
கிட்டும் பொருள் குறைவின்றி கிடைக்க
கிழக்கு சூரியனுக்கு விழா
மகிழ்ச்சி பொங்க பொங்கல் அனைத்துதெய்வங்களுக்கும்
மங்கா புகழ்கொள்ள விழா
காமதேனுவிற்கு மனித உயிரை காப்பதற்காய்
காலமெல்லாம் நன்றிகூறி விழா

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

தமிழ் வரிசையான வள்ளுவம்


தமிழ் வரிசையான வள்ளுவம்

அகத்தை சொல்லா அறிவு மானிடற்கு
அழகாம் அதைசொல்பவன் ஞானியோ
ஆறு மடை திறந்ததுபோல் நல்லோரன்பு
ஆறா அவா அன்றோ
இயல்பு மாறும் அகத்தை சொல்லுதலும்
இயற்கைக்கு எதிரானதே சொல்லாதே
ஈட்டு பொருள் அனுபவி இயன்றமட்டும்
ஈட்டியது எட்டாக்கனி ஆகாது
உருகு உள் அகம் உரைக்காதே
உருகும் உன்னன்பு மேகமாகுமாம்
ஊசி போனது போல் ஆகும்பண்டம்
ஊரார்கும் பயன்படாது அறி
எழு காலையில் எண்ணிய நல்லதைசெய்ய
எமகண்டம்ராகுகுளிகைக்குள் நல்லநேரத்தில் முடித்துவிடு
ஏழு கடல் ஏழு மலை
ஏகும் தொலைவு இல்லை
ஒருங்காய் ஒற்றுமையாய் மனமாறுபாடுஇன்றி பணிசெய்
ஒன்றும் பேசவேண்டா நட்தருனத்தில்
ஓதும் அனைத்தும் உனக்காகவும் என்றறி
ஓதுவதை செவிகொடுத்து கேள்
ஒவ்ளாக்கியம் என்பதும் வள்ளுவமே படைபவனை
ஒவ்வா வார்த்தைகளால் வசையாதே
அக்தரித்து ஆசையகற்றி எல்லோரையும் நண்பனாகபாவித்து
அக்கறை கொள் அக்துஇனிதாம்
கவின்மிகு இறகாம் மயிலினது பஞ்சவர்ணக்கிளிபற்றி
கவி என்ன பாடுவானோ
காற்று புகா இடம் உண்டோ
காளி நீ அரிவையோ
கிடைப்பதை பகிர்ந்துண்டால் உன்முறை வரும்போது
கிடைக்கும் சந்தோசமே தனி
கீற்று பாளை இளநீர் தேங்காய்மரமென
கீறும்துடைப்பம் வரைதரும் தென்னைவளர்
கெட்டாள் தாசி கெடுமை செய்வாள்
கெட்ட சகவாசம் எதற்கு
கேட்டு கொடுப்பவன் முதலாளி கொடுப்பவன்
கேட்காமல் நண்பன் அவனிற்கீடுண்டோ
கையாளாகா மானிடன் வாழ்ந்து என்னபயன்
கைராசிகாரன் அருகே இருந்தும்
கொட்டிகொடுப்பவன் புனிதன் அவனுக்கென்று சான்தான்வயிறோ
கொள்ளவோன்னா சரிரமே வயிறோ
கோவலன் கண்ணகி சரித்திரம் தாசியால்
கோட்டி பிடித்து அழிந்தது
கொவ்வை செவ்வாயை நினைத்து கோவானாலும்
கொவ்வடி பிடிப்பது தீது



சனி, 8 ஜனவரி, 2011

புதன், 5 ஜனவரி, 2011

அய்யப்ப பக்தி பாடல்

ஓங்கார நாதம் உயர்வான வேதம் தேனான கீதம் சாஸ்தாவுன் நாமம்
ஓங்கார நாதம் உயர்வான வேதம் தேனான கீதம் சாஸ்தாவுன் நாமம்
குளிரான காலம் குறை தீர்க்கும் உன் சரணம் ஏழையே உன் வருத்தம் அகன்ற நன் நேரம்
குணமான அன்பும் குன்றே கரையும் என்றுரைத்த நல் உன் நாவும் சரணம் சரணம்
கூப்பிடு சரணமென்றே வருகின்ற ஐய்யன் என் ஐய்யப்பன் அன்றோ அவன் தாலடி சரணம்
கேட்டால் தருவான் கெடுவினை தீர்ப்பான் ஐயா சரணம் சரணம் சரணம்
கொடுப்பன் பொன் பொருள் கோட்டியை விரட்டுவான் சரணம் சரணம் சரணம் சரணம்
கனிந்த அன்பால் கரை மீட்கவைப்பன் அய்யா சரணம் சரணம் சரணம்
காரிருள் நீங்கி சூரியன் உதிப்பதுபோல் வாழ்வில் இன்னல் அகலும் சரணம் சரணம் அய்யா சரணம்
கிட்டுமா என்றெண்ணி ஏங்கியே வாழ்வோர்க்கு கிடைக்கவைப்பான் என் அய்யன் சரணம் சரணம்
கீதை நாயகன் ருத்ரதாண்டவன் மைந்தன் பாதம் பணிவோம் சரணம் சரணம் சரணம்

செவ்வாய், 4 ஜனவரி, 2011

ஆபிரகாம் லின்கோல்ன்

நான் இறந்தபின்
என் கல்லறையில் கேளுங்கள்
என் கல்லறையும் பதில் சொல்லும்
- ஆபிரகாம் லின்கோல்ன்

திங்கள், 3 ஜனவரி, 2011

பொய்யாமை

பொய் சொல்லி பெரும் எதுவும்
பொய்தேபோகும் அடுத்தவர் சாபம்வேண்டா
கெட்ட தன்மையின் ஆரம்பம் பொய்
கெடும் ஆற்றல் பொய்ப்பின்
பொய் பொய்க்கும் சொல்லும் பொய்க்கும்
பொய் ஏன் நல்லுலகில்
நேர்மை பொய்யல்லாதது வேண்டின் நிறைய
நேர்த்தியாக படி அதன்படிசெய்
வைராக்கியம் என்பது ஒரு உண்மையின்
வைரம் போன்ற நம்பிக்கை