புதன், 9 மார்ச், 2011

தன்னிலை மாறாமை

தன்னிலை மாறுபவன் வீழ்வதும் அகுதன்றி
தன்னையொரு பொருட்டாய் மதியாதவன்
போற்றப்படுபவதும் ஈடு இணையில்லா உலகின்
பொற்ட்சான்றோர் மதிப்பதும் இயல்பு
அனைவரும் மாறும்போது மாறாதான் தெய்வமென்றோ
அதிலும் சிறந்தவனோ ஆவன்
தன்னிலை கெடின் அனைத்தும் கெடும்
தன்னிலை மனதில்மாறாமை நன்று
இல்லையேல் பேடு என்றே கொள்ளப்படுவர்
இயல்பை பெறுபவன் மனிதன்
தன்னிலை அனைத்திலும் மாறாதவன் இறையருட்செல்வரென
தன்முன்நிறுத்தப்படுவான் இறைவன் அரங்கில்
தான் கெட்டு தன்னினதாரையும் கெடுப்பவன்
தானே கெட்டழிவது உறுதி
இயற்கைக்கு எதிரான செயல் அதுவாம்
இயல்பாக இரு இயற்கையுடனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக